Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 37

அர்ஜுன உவாச1 |

அயதி1: ஶ்ரத்43யோபே1தோ1 யோகா3ச்11லித1மானஸ: |

அப்1ராப்1ய யோக3ஸந்ஸித்4தி3ம் கா1ம் க3தி1ம் க்1ருஷ்ண க3ச்12தி1 ||37||

அர்ஜுனஹ உவாச—--அர்ஜுனன் கூறினார்; அயதிஹி----தளர்வான; ஶ்ரத்தயா--—-நம்பிக்கையுடன்; உபேதஹ---உடையப்பெற்றவர்; யோகாத்--—யோகத்திலிருந்து; சலித-மானஸஹ---மனம் விலகியவர்; அப்ராப்ய---அடையத் தவறியவர்; யோக-ஸந்சித்திம்---யோகத்தில் உயர்ந்த பரிபூரணம்; காம்—-எந்த; கதிம்---இலக்கிற்கு; கிருஷ்ணா—---ஸ்ரீ கிருஷ்ணா; கச்சதி--—செல்கிறது

Translation

BG 6.37: அர்ஜுனன் கூறினார்: நம்பிக்கையுடன் பாதையைத் தொடங்கும் தோல்வியுற்ற யோகியின் கதி என்ன, மற்றும் ஒரு நிலையற்ற மனப்பான்மையால் போதுமான முயற்சி செய்ய தவறியதால் இந்த வாழ்க்கையில் யோகத்தின் இலக்கை அடையாமல் தோல்வியுற்ற யோகியின் கதி என்ன?

Commentary

கடவுள்-உணர்தல் நோக்கிய பயணம் நம்பிக்கையுடன் தொடங்குகிறது. பல நேர்மையான ஆன்மாக்கள் தங்கள் கடந்தகால வாழ்க்கையின் ஸன்ஸ்காரங்கள், அல்லது துறவிகளின் சங்கம், அல்லது உலகில் உள்ள தலைகீழ் மாற்றங்கள் அல்லது பல காரணங்களின் மூலம் வேதங்களின் தெய்வீக அறிவில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். பயணத்தைத் தொடங்குவதற்குத் தேவையான நம்பிக்கையை உருவாக்கும் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், இந்த ஆர்வலர்கள் தேவையான முயற்சிகளைச் செய்யாமல், தளர்வாகி இருந்தால், (அயதி1ஹி) மனம் அமைதியற்றதாக இருக்கும். இப்படிப்பட்டவர்களால் இந்த வாழ்க்கையில் பயணத்தை முடிக்க முடியாது. அத்தகைய பயிற்சியாளர்களின் கதி என்னவென்று அர்ஜுன் கேட்கிறார்..

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!